Friday, November 28, 2008

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள்। ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது। சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.

பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர்। ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது। இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன் படி ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.

சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது। இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர்। இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.

1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது। அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி। எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர். முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.

டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை। ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. இருப்பினும் அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள்.( யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், யாஹ்வே அல்லது எல்(ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.

கி।பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது। யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும். இன்று இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.

யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது। யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில் யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா( மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரை யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும், (அல்ஜீரியா-மொரோக்கோ) குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.

நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது। சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை. யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.

இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது। இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது. முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.

கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது। அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது. உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை।” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது. தமது ஆக்கிரமிப்பை, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமை(அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.

Jew from WikipediaA Resource for Turkic and Jewish History in Russia and Ukraine

Monday, November 24, 2008

ஈழத்தில் நடந்தது என்ன? இந்திய ராணுவ அதிகாரியின் வாக்குமூலம்

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!நண்பர் கொழுவி அனுப்பியுள்ள அடுத்த கட்டுரைத் தொகுப்பு இது. இந்திய அமைதிக் காப்புப் படையில் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றிய கர்கிரத்சிங் அவர்கள் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தைத் தொகுத்துள்ளார் கொழுவி.படிக்க சில இடங்களில் சுவாரஸ்யமாகவும், பலவிடங்களில் நம்ப முடியாத அதிர்ச்சியையும் தருகிறது.. இது போன்ற வரலாற்று ஆவணங்கள் நமக்கு என்றென்றைக்கும் தேவை.. அதிலேயும் ஈழத்து விஷயத்தில் தொடர்ந்து வெளிவரும் பூதங்களையெல்லாம் பார்த்தால் ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்வி நம் மனதில் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறது. பதில் கிடைக்காத இந்தக் கேள்விக்கு பதில் சொல்லப் போவது யார் என்றுதான் தெரியவில்லை. தொடர்ந்து படியுங்கள்..இனி அண்ணன் கொழுவி பேசுகிறார்.“தொடர்ந்தும் புலிகள் சொன்னார்கள்; ஈழத்தமிழர்கள் சொன்னார்கள் என நாம் வெளியிடும் ஆவணங்கள் ஒரு பக்கச் சார்பானவையாக இருப்பதாக நினைக்கிறோம். ஆதலால் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து கௌரவித்து மாற்றுக் குரல்களையும் அனுமதிக்கும் நோக்கில் - இம்முறை IPKF இல் பணிபுரிந்த ஒரு அதிகாரியின் வாக்குமூலத்தை தருகிறோம்.”ஒரு இந்திய இராணுவத் தளபதியின் அரசியல் வாக்குமூலம்” எனும் தலைப்பில் இதனைத் தனிப்பதிவாக இட்டு ஜனநாயகமும் மாற்றுப் பார்வைகளும் தளைத்தோங்க ஆவன செய்யவும்."இலங்கையில் தலையீடு" - "மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள்" என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார்.72 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது.தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் - இந்தியத் தூதர் ஜே.என்.டிக்சிற் - மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்; ஆகியோர் பலாலிப் படைத்தளத்தில் - ஒரு சந்திப்பின் பின் - ஒன்றாக நின்று எடுத்த நிழல்படம் நூலின் முன் அட்டையை அலங்கரித்துள்ளது.இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் முதல் 137 பக்கங்களுடன் நூல் நிறைவடைகின்றது. ஏனைய பக்கங்கள் ‘இலஸ்ரேட்டட் வீக்லி’ என்ற இந்தியச் சஞ்சிகைக்கு நூலாசிரியர் 1991-ல் வழங்கிய செவ்வி மற்றும் இந்தியத் தளபதிகளின் கடிதங்கள் - கட்டளைகள்-தகவல், அட்டவணைகளுடன் நிறைக்கப்பட்டுள்ளது.நூலாசிரியர் கூறும் தகவல்கள்ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தினால் ஆரம்பம் முதலே இந்திய சமாதானப்படை குழப்பகரமான நோக்கங்களுடன்- பிழையாக வழி நடத்தப்பட்டன என்று நூலாசிரியர் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தக் குழப்பங்களை, பிழைகளைச் சரி செய்ய தான் முயன்று தோற்றதாக நூலாசிரியர் சம்பவங்களுடன் கூறுகின்றார்.தனி ஈழம் என்ற தமிழரின் அரசியல் அபிலாசையை ஈடேற்றக்கூடிய ஒரே இயக்கம் புலிகள் இயக்கம்தான் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக இருந்ததை, தான் கண்டுணர்ந்ததாக நூலாசிரியர் பிரகடனப்படுத்துகின்றார்.ஆனால் தமிழ் மக்களிடமிருந்து புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்துவதுதான் இந்திய சமாதானப்படையின் பிரதான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று டிக்சிற் கருதினார். இது நடைபெறாதென்று தனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.புலிகளின் ஆயுதக் கையளிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் பிரதம மந்திரியின் (ராஜீவ்காந்தி) அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் செயலிழந்து போன மற்றைய இயக்கங்களுக்கு றோ அமைப்பினர் புதிய ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தனர் என்று நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.இந்த ஆயுத வழங்கலைப் பற்றி டிக்சிற் உட்பட தேவையான அனைவருக்கும் தான் அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் வீடியோச் சுருள் ஆதாரத்தையும் தான் டிக்சிற்றிற்குக் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோச் சுருள் புலிகளால் தனக்குத் தரப்பட்டது என்றும் கூறியுள்ளார். சமாதான காலத்தில் பேச்சிற்கு அழைத்துவிட்டு அங்கே தலைவர் பிரபாகரனைக் கொல்ல டிக்சிற் தீட்டிய சதித் திட்டமொன்றையும் நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.செப்ரெம்பர் 14 ஆம் திகதி (1987) தொலைபேசியூடாக டிக்சிற் தன்னை அழைத்து 'பலாலி படைத் தளத்திற்குச் சந்திப்பிற்காக பிரபாகரன் வரும்போது அவரைக் கைது செய்யவும் அல்லது சுட்டுக் கொல்லவும்" என்றார். இந்தச் செய்தியைத் தனது மேலதிகாரியான லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் நூலாசிரியர் கூறினார். இதற்கு திபேந்தர்சிங் கூறினார் 'வெள்ளைக் கொடியின் கீழ் ஒரு சந்திப்பிற்காக பிரபாகரன் வரும்போது அவரைச் சுட்டுக்கொல்ல முடியாது" என்று டிக்சிற்றுக்கு அறிவிக்கச் சொன்னார். அதை டிக்சிற்றுக்கு அறிவித்தேன். அதற்கு டிக்சிற் சொன்னார் 'ராஜீவ்காந்திதான் இந்த அறிவுறுத்தலை எனக்குச் சொன்னார். ஆனால் அதை நிறைவேற்ற இந்தியப்படை தயங்குகின்றது. இதற்கு இந்திய சமாதானப்படையின் கட்டளை அதிகாரி என்ற வகையில் நீர்தான் பொறுப்பு" என்று தன்னைக் குற்றம் சாட்டியதாக நூலாசிரியர் தகவல் தெரிவிக்கின்றார்.டிக்சிற்றுடன் தான் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அடுத்தநாள் ஜெனரல் சுந்தர்ஜி தனது கோபத்தை என்னிடம் காட்டினார் என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.திலீபனின் ஈகச்சாவுதிலீபனைச் சாகவிடக் கூடாது என்று திபேந்தர்சிங்கிற்கும் - டிக்சிற்றுக்கும் வலியுறுத்திச் சொன்னதாக நூலாசிரியர் எழுதியுள்ளார். அப்படி நடந்தால் அது இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் தமிழ் மக்களை மாற்றிவிடும் என்று எச்சரித்ததாகவும் கூறுகின்றார்.செப்ரெம்பர் 25, திலீபனின் உயிர்பிரிவதற்கு முதல்நாள், திபேந்தர்சிங் ஒரு அறிவித்தலைத் தந்தார். தலைவர் பிரபாகரனைச் சந்திக்க டிக்சிற் விரும்புகின்றார் என்பதே செய்தி. அதைப் புலிகளிடம் சேர்ப்பிக்கச் செல்லும் போது வழியில் ஒரு மாபெரும் மக்கள் ஊர்வலம் எதிர்ப்பட்டது என்று நூலாசிரியர் விபரிக்கின்றார். 'தீப்பந்தங்கள்- மாலைகளுடன் பெண்களும் ஆண்களும் இணைந்து நல்லூர் ஆலயம் நோக்கிச் சென்றனர். சாவின் வாசலில் நின்ற திலீபனைச் சந்திக்க அந்த மக்கள் கூட்டம் சென்றது. இந்திய எதிர்ப்பு - சிங்கள எதிர்ப்புக் கோசங்களைக் கூவியவாறு கூட்டம் நகர்ந்தது" என்று நூலாசிரியர் விபரித்துள்ளார்.பிரபாகரன் - டிக்சிற் சந்திப்பிற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது திலீபன் உயிர் நீத்தார். பலாலியில் இருந்த தனது தலைமைப் பணிமனையை நோக்கி தலைவர் பிரபாகரன் வந்துகொண்டிருந்த போது திலீபன் மரணித்திருந்தார்" என்று நூலாசிரியர் தனது நினைவுகளை மீட்டுள்ளார்.'திலீபனின் சாவுடன் ஐ.பி.கே.எவ். மீதான நம்பிக்கையைப் புலிகள் இயக்கம் இழந்துவிட்டது" என்று நூலாசிரியர் கூறுகின்றார்.இந்தச் சம்பவத்திற்கு முன் இந்திய அமைதிப்படையையும் றோவையும் புலிகள் சரியாகவே இனம் பிரித்து அறிந்து வைத்திருந்தனர். றோவின் சதிவேலைகளைப் புலிகள் ஆதாரங்களுடன் தம்மிடம் சமர்ப்பித்தனர் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.படகுத் துயரம்தளபதிகள் புலேந்திரன் - குமரப்பா உட்பட 12 புலிகளின் இழப்பை நூலாசிரியர் படகுத்துயரம் என்ற மகுடத்தில் எழுதியுள்ளார்.கடலில் 17 புலிகள் சிங்களப் படையால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி புலிகளிடமிருந்து கிடைத்த உடனேயே அவர்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக பிரிகேடியர் பெர்னாண்டசை அனுப்பினேன் என்று நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.தலைவர் பிரபாகரனைப் பல தடவைகள் தான் சந்தித்திருந்ததால் தலைவரின் மனவோட்டத்தைத் தான் நன்றாக விளங்கிக் கொண்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அந்தப் 17 புலிகளையும் இந்திய அமைதிப் படை பாதுகாக்கத் தவறினால் பிரபாகரனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தான் நன்றாக அறிந்து வைத்திருந்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.அந்தப் 17 புலிவீரர்களும் பலாலி வான்தளத்தின் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்தனர். அது இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த இடத்தைச் சூழ 60 சிங்களப் படையினர் சிங்களத் தளபதிகளால், நிலைகொள்ள வைக்கப்பட்டனர். அந்த 60 சிங்களச் சிப்பாய்களையும் சுற்றி ஒரு பலமான பாதுகாப்பு வேலியைப் போடுமாறு ஒரு இயந்திரப் படைக் கொம்பனிக்கும் - பரசூட் படையணிக்கும் உத்தரவிட்டேன் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.17 புலிகளையும் கொழும்புக்குக் கொண்டுசெல்ல சிங்களப்படை முயற்சித்தால் சயனைட் உண்டு புலிகள் சாகத் தயாராக இருப்பதாகத் தனது மேலதிகாரியான லெப்.ஜெனரல் திபேந்தர்சிங்கிற்கு அறிவித்ததாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.ஒக்டோபர் 05 ஆம் திகதி (1987) பிற்பகல் 2.15 மணியளவில் தனக்கு ஒரு அவசரச் செய்தி அனுப்பப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். (இந்திய) 'இராணுவத் தளபதியிடமிருந்து கர்கிரத்சிங்கிற்கு" என்று அந்தச் செய்தி இருந்தது. அந்தச் செய்தியில்........... "பலாலிப் படைத் தளத்தின் சிங்களத் தளபதி பிரிகேடியர் ஜெயரட்ணா, தான் விரும்பியதைச் செய்யட்டும். நீர் ஏன் சிறிலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தலையிடுகின்றீர்.... சிறிலங்காவின் விமானங்களை நீர் தடுக்க வேண்டாம்..." என்றிருந்தது. என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஐ.பி.கே.எவ்.இன் பாதுகாப்பை நீக்கும்படி நான் உத்தரவிட்டேன். இந்திய அமைதிப் படையினர் விலகிக்கொண்ட உடனேயே சிங்களப் படைகள் புலி வீரர்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் பாய்ந்தனர். புலிகள் சயனைட்டுக்களை உண்டனர்.புலேந்திரனும் - குமரப்பாவும் ஆளுக்கு இரண்டு சயனைட்டுக்களை உண்டு உயிர் நீத்ததாகத் தனது மருத்துவர்கள் அறிக்கை தந்ததாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.'(சிங்கள) எதிரிக்கு அச்சமூட்டும் ஒரு தளபதியாக புலேந்திரன் இருந்துள்ளார்" என்று கூறும் நூலாசிரியர், அவரை உயிருடன் தம்மிடம் ஒப்படைக்கும்படி சிங்கள இராணுவத் தளபதி ஜெனரல் ரணதுங்கா தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.திருமலை நகரில் இன மோதல் நடந்த இடங்களைத் தான் நடந்து சுற்றிப் பார்த்த போது தன்னுடன் புலேந்திரனும் வந்தார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.தளபதி குமரப்பா பற்றி நூலாசிரியர் குறிப்பிடும்போது 'யாழ்ப்பாணத்தில் தான் சந்தித்த முதல் புலித்தளபதி குமரப்பாதான்" என்று எழுதியுள்ளார்.தளபதிகள் புலேந்திரன், குமரப்பா ஆட்களைப் பாதுகாக்க தான் முயன்றதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்களைக் கைவிட்டது டிக்சிற்தான் என்றும் கூறியுள்ளார்.ஒக்டோபர் 08 ஆம் திகதி 1987 ஜெனரல் சுந்தர்ஜி பலாலி வந்து புலிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி தனக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் "டிக்சிற்றுடன் நீர் ஒத்துழைக்கின்றீர் இல்லை என்பது தெரியும். அவர் தனது வேலைகளைத்தான் செய்கின்றார். அவருடைய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று தனக்கு அறிவுரை வழங்கினார் என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.அத்துடன் சில பிங்கலர் தாள்களைத் தன்னிடம் தந்து வாசிக்கும்படி கட்டளையிட்டார். புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான ஜெனரல் சுந்தர்ஜியின் சிபார்சுகளைப் பிரதமர் ராஜீவ்காந்தி ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பது அந்தப் பிங்கலர் தாள்களைக் கண்டதும் தனக்குப் புரிந்து விட்டதாக நூலாசிரியர் எழுதியுள்ளார்.'இன்றிரவே (08 ஆம் திகதி) தாக்கு" என்று லெப். ஜெனரல் திபேந்தர்சிங்கின் முன்னிலையில் ஜெனரல் சுந்தர்ஜி தனக்கு உத்தரவிட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.உத்தரவை நடைமுறைப்படுத்த கிளிநொச்சி - வெள்ளாங்குளம் - முழங்காவில் போன்ற இடங்களில் புலிகளின் முகாம்களைத் தாக்குமாறு தான் படையினரைப் பணித்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் 08 ஆம், 09 ஆம் திகதிகளில் நடந்தது.ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்திய புலிகள் போர் தொடங்கியது. பல முனைகளைத் திறந்து யாழ். நகரைக் கைப்பற்ற நான் படைநகர்த்தினேன்" என்கின்றார்.தான் நடாத்திய சண்டைகளை நூலாசிரியர் வரைபடங்களின் உதவியுடன் விளக்க முயன்றுள்ளார்.ஐ. ஆனைக்கோட்டை சமர்ஐஐ. யாழ் - பழைய பூங்காவைக் கைப்பற்றும் சண்டை ஐஐஐ. சுதுமலை நடவடிக்கை ஐஏ. உரும்பிராய் சந்தியைக் கைப்பற்றும் சண்டைஏ. கோப்பாய் சமர்ஏஐ. கந்தரோடைச் சமர் ஏஐஐ. மருதனார்மடம் சமர்.. இவ்வாறாகச் சண்டைகளை இனங் காட்டி அந்தச் சண்டைகளின் தன்மைகள் பற்றிச் சுருக்கமாக விபரம் தந்துள்ளார்.இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் சிறிலங்கா சனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஒரு இராணுவச் சதிமுயற்சி நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கொழும்பிலுள்ள தாஜ் தங்கு விடுதியில் 100 சிறப்புக் கொமாண்டோப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் நூலாசிரியர் தகவல் வெளியிட்டுள்ளார். சண்டை தொடங்கியதும் இந்தக் கொமாண்டோப் படையினர் பலாலிக்கு அழைக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.(பெப்ரவரி 1988) இந்திய - புலிகள் போர் தொடங்கி 4 மாதங்களின் பின்னர் லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கின் இடத்திற்கு லெப். ஜெனரல் கல்கட் நியமிக்கப்பட்டார் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.லெப். ஜெனரல் திபேந்தர் சிங் ஓய்வுபெற்றுச் செல்ல சில வாரங்களுக்கு முன்னர் (சனவரி 1988) நூலாசிரியரான மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்கும் பணி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா சென்றார்.பணிமாற்றத்திற்கான காரணம் தனக்குத் தெரியாதென்று கூறும் நூலாசிரியர் டிக்சிற்றுடனான முரண்பாடு காரணமாக இருக்கலாம். பிரபாகரனைக் கைது செய் அல்லது சுட்டுக்கொல் என்ற டிக்சிற்றின் உத்தரவைத் தான் மறுத்ததாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.1155 இந்தியப்படையினர் புலிகளுடனான போரில் கொல்லப்பட்டனர் என்று நூலாசிரியர் விபரம் தந்துள்ளார்.03 தொடக்கம் 07 நாட்களுக்கிடையில் படை நடவடிக்கையை முடித்து - புலிகளை அழிக்க முடியும் என்று தான் சொன்னதாக வெளியாகியிருந்த செய்திகளை நூலாசிரியர் மறுத்துள்ளார்.இந்தக் காலக்கெடுவை ராஜிவ் காந்தியிடம் சொன்னவர் ஜெனரல் சுந்தர்ஜிதான் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டள்ளார்.புலிகளுடன் சண்டை தொடங்கினால் அந்தப் போர் பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் நடக்கும் என்று மிசோராம் - நாகலாந்து உதாரணங்களைக் குறிப்பிட்டு லெப். ஜெனரல் றொட்டிற்கோவிற்கு தான் சொன்னதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.றொட்றிற்கோ அதை நம்பவில்லை 'நகர்ப்புற போர்முறையில்தான் புலிகள் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள்" என்றும் காரணம் சொன்னார் என எழுதியுள்ளார்.சமாதானக் காலத்தில் தலைவர் பிரபாகரனைக் குறிவைத்தது போல போர்க்காலத்திலும் தலைவரைக் குறிவைத்து இந்தியப்படை நடாத்திய மூன்று சம்பவங்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.முதலாவது சம்பவம் போர் தொடங்கிய மறுநாள் நிகழ்ந்தது அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்....."பலாலியில் இருந்த சிங்கள இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து நான் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்றைப் பெற்றேன். அதாவது, கொக்குவில் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் போரை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார் என்பதே அந்தத் தகவல். இந்தத் தகவலை லெப். ஜெனரல் திபேந்தர் சிங்குடன் விரிவாகக் கலந்தாலோசித்தேன். தலைவரின் இருப்பிடத்தைத் தாக்கி அழிப்பதற்கான அனுமதியையும்-அதற்குத் தேவையான மேலதிக உதவிகளையும் திபேந்தர்சிங் வழங்கினார். எனது கட்டளைப் பீடத்திலிருந்த திபேந்தர்சிங் அங்கிருந்து மேஜர். ஜெனரல் கல்கட்டிடம் ஒரு அறிவுறுத்தலை விடுத்தார். அந்தத் தாக்குதலுக்கான மேலதிக துருப்புக்களை (இந்திய) இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து கேட்டுப்பெறுமாறு அறிவுறுத்தினார். இந்தத் தாக்குதல் தமது படையினரின் ஒருங்கிணைப்பின்மையாலும் - புலிகளின் நேர்த்தியான எதிர்த் தாக்குதல்களாலும் தோல்வியடைந்தது" என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.இரண்டாவது சம்பவம் டிசம்பர் 1987 இல் நடந்தது.வடமராட்சியிலுள்ள ஒரு வைத்தியசாலை வளாகத்தில் நின்றபடி தலைவர் பிரபாகரன் அவர்கள் கடலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்ததாக ‘றோ’ அமைப்பினர் ஒரு தகவலை வழங்கியிருந்தனர். தாக்குதலுக்காகப் படையினர் அனுப்பப்பட்டனர்.இந்த நடவடிக்கையைக் கட்டளை அறையிலிருந்து தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். "ஆனால் நடு இரவு தாண்டியும் கடல்வழி தரையிறக்கத்திற்கான கடற்கலம் வந்து சேரவில்லை. விடியத் தொடங்கியதால் துருப்புக்களைப் பின்வாங்கச் சொல்லிக் கட்டளையிட்டேன். அப்போது நாங்கள் எங்கே தரையிறங்க இருந்தோமோ! அங்கிருந்து புலிகள் கடுமையாகத் தாக்கினர்" என்று நூலசிரியர் விபரித்துள்ளார்.கடலிலிருந்து பீரங்கிச் சூட்டாதரவு செறிவாகக் கிடைத்துக்கொண்டிருந்தாலும் எங்களால் அந்த இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்று களத்தில் தலைமை வகித்துக்கொண்டிருந்த கேணல் சொன்னதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.அடுத்த சம்பவம் வித்தியாசமானது- தமது உளவுத்துறையினரின் தகவல் சேகரிப்புக்களையும்- தமது படைத்தளபதிகளையும் கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார். "மட்டக்களப்பில் ஒரு புலி பிடிபட்டிருக்குது. அவரை விசாரித்த கொமாண்டர் தான் பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட்டேன், அவரைப் பிடித்த மாதிரித்தான் என்பது போல லெப். ஜெனரல் றொட்றிக்கோவுக்கு (மட்டு. ஐ.பி.கே.எவ். தளபதி) அறிவிக்க, இவரும் நம்பிவிட்டார். பிரபாகரனைப் பிடித்து விட்டதாகத் தான் அறிவிக்கலாம் என்று லெப். ஜெனரல் நம்பிவிட்டார். அதனால் என்னையும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்புக்குப் பறந்தார். அங்கே சென்று பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது பிரபாகரனைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு அப்பாவித் தமிழன்தான் பிடிபட்டிருந்தான் என்று தெரிந்தது" என்று நகைச்சுவையாக எழுதியிருந்தார்.முடிவுரைமுறுக்கு மீசை - வெங்கல ஓசைச்சிரிப்புடன் நூலாசிரியரான மேஜர் - ஜெனரல் கர்கிரத்சிங் புலிகளுக்கு அறிமுகமாகியிருந்தார். இந்திய சமாதானப் படைத் தளபதிகள் சிலர் எழுதி வெளியிட்ட நூல்களுடன் ஒப்பிடுகையில் கர்கிரத் சிங்கின் இந்த நூல் சற்று வேறுபடுகின்றது.மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்கின் கருத்துக்களில் வெளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. அவரின் கணிப்பீடுகளில் ஒரு நேர்மை வெளிப்படுத்தப்படுகின்றது. பல உண்மைகளையும் அவர் அம்பலமாக்கியுள்ளார். புலிகளுக்கும் மக்களுக்குமான பிணைப்பை அவர் சரியாக இனங்கண்டு நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.இந்திய சமாதானப் படைத் தளபதியாக இங்கே அவர் பணியாற்றிய காலம் குறுகியது. சமாதான காலத்தில் மூன்று மாதமும் - போர்க்களத்தில் மூன்று மாதமும் என மொத்தம் ஆறு மாத காலம் மட்டுமே இங்கே பணியாற்றியிருந்தார். 1988 ஜனவரியில் பணிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.டிக்சிற்றுடனான முரண்பாடும் - அவரது அறிவுறுத்தல்களை ஏற்க மறுத்ததும்தான் தனது பணிமாற்றத்திற்குப் பிரதான காரணம் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.டிக்சிற்றுடன் உடன்பட்டு வேலை செய்யத் தவறுவது பற்றி ஜெனரல் சுந்தர்ஜி தன்னைக் கடிந்து கொண்டதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார். பிரதமர் ராஜிவ் காந்தியின் குரலாகத் தான் ஒலிப்பதாக டிக்சிற் தன்னிடம் கூறியதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.இந்திய சமாதானப்படைக்கு ஒரு உத்தரவு - இந்திய புலனாய்வுத்துறை றோவுக்கு இன்னொரு உத்தரவு என்று குழம்பி எழுதும் நூலாசிரியர், அரசியலில் - இராணுவ ரீதியில் பெரும் குழப்பம் இந்தியத் தரப்பில் இருந்ததாகவும் எழுதியுள்ளார்.நூலாசிரியரின் குழப்பம் பற்றி இங்கே அதிகம் ஆய்வு செய்வதற்கு எதுவுமில்லை.நூலாசிரியர் கூறுவதுபோல அவை ஒரு குழப்பமான செயற்பாடு அல்ல. அவை ஒரு நாடகத்தின் பல்வேறு காட்சிகள்.இந்திய அரசிற்குப் பெருந் தோல்வியாக முடிந்த அந்த நாடகம் பற்றிய விளக்கங்கள் இங்கே தேவையில்லை.அரசியல் கணிப்பீடுகளில் நேர்மையும் - வெளிப்படைத்தன்மையும் காட்டிய நூலாசிரியர் தான் நடாத்திய போரில் தமிழ்மக்கள் அடைந்த கொடுமைகள் - அழிவுகள் பற்றிய விடயங்களில் நேர்மையையும் கடைப்பிடிக்கவில்லை. வெளிப்படைத் தன்மையையும் கைக்கொள்ளவில்லை. அவற்றை ஒட்டுமொத்தமாகவே இருட்டடிப்புச் செய்துள்ளார். அந்த வகையில் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துள்ளார்.நூலாசிரியர் நடாத்திய மூன்று மாதப் போர் என்பது யாழ் நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மும்முனையில் நடாத்தப்பட்ட ஒரு பாரிய மரபுச்சமர்.இந்த மூன்று மாதப் போர்க்காலத்தில் யாழ் குடாநாட்டில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல்.பிரம்படிப் படுகொலை - கொக்குவில் பாடசாலைப் படுகொலை - யாழ் வைத்தியசாலைப் படுகொலை.... என்பன அவற்றில் முக்கியமானவை.மக்களின் வாழிடங்கள் மீது ஆட்டிலறிகள் - டாங்கிகளால் சுட்டு - மக்களைக் கொன்றும் - அகதிகளாக்கியும் - பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் யாழ் நகரை ஆக்கிரமித்த சாதனையை அவர் எழுதவில்லை. மாறாக, மிக உயர்ந்த கட்டுப்பாடு - ஒழுக்கத்தை இந்தியப் படையினர் கடைப்பிடித்தனர். தமிழ் மக்களிடமிருந்து நன்மதிப்பைப் பெற்றனர் என்று மனச்சாட்சியில்லாமல் நூலாசிரியர் பொய் கூறியுள்ளார்.அதேபோன்று, யாழ்ப்பாண ஊடகங்களான ஈழமுரசு, முரசொலி மற்றும் புலிகளின் ஒளி - ஒலிபரப்பு நிலையங்களை அழித்த செயலைக் கர்கிரத் வெட்கமின்றி நியாயப்படுத்தியுள்ளார். அந்த ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளை - தகவல்களை மக்களுக்கு நேர்த்தியாக வழங்கி வந்தன. புலிகளின் இராணுவ சாதனைகளை மெச்சிப்பேசி மக்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தன என்று தாக்குதலுக்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார்.இந்திய - புலிகள் போர் சுமார் இரண்டு வருடங்களுக்கும், இரண்டு மாதங்களுக்கும் நடந்திருந்தன. இதில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நடந்த போரின் கதையைத்தான் தனது பார்வையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.இந்த மூன்று மாதகாலப் போருக்குள்ளேயே தலைவர் பிரபாகரன் மீது மூன்று - நான்கு தடவைகள் இந்தியப்படைகள் கொலைத் தாக்குதலுக்கு முயன்றன. ஆனால், போர் தீவிரமடைந்து வன்னி நிலப்பரப்பு முக்கிய போர்க்களமாகிய பின்னர், தலைவர் பிரபாகரனைக் கொலை செய்ய இந்தியப் படைகள் பல சமர்களையே நடாத்தியிருந்தன. எல்லாவற்றிலும் இந்தியப்படை தோற்கடிக்கப்பட்டிருந்தது.இந்தியப்படையின் தோல்விக்கு இந்திய அரசின் குழப்பகரமான கொள்கை - பலரின் தலையீடு என்பன பிரதான காரணம் என்று நூலாசிரியர் கூறியுள்ளார். தனது இதே கருத்தையே தனக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தளபதியான மேஜர் - ஜெனரல் சர்தேஸ் பாண்டேயும் சொல்லியுள்ளார். என்று நூலாசிரியர் நியாயம் சொல்லி - அதற்கு மற்றைய தளபதிகளையும் துணைக்கு அழைத்துள்ளார்."கொழுவி அண்ணை.. கர்கிரத்சிங் ராஜீவ்காந்தி பற்றியும், தீட்சித் பற்றியும், உங்களது தேசியத் தலைவர் மேதகு திரு.பிரபாகரனை கொலை செய்ய நடத்திய கூட்டு முயற்சி பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லி உங்கள் தரப்பு வாதமாக வைக்கும் உங்களுக்கு, இதே புத்தகத்தில் அவர் தலைமை ஏற்று நடத்திய யாழ்ப்பாணத்துப் போர் பற்றி அவர் சொல்லும் நியாயங்களை மட்டும் ஏற்க உங்களுக்கு மனம் வரவில்லை பாருங்கள்.. வாழ்க உமது தேச பக்தி.. ஆனால் நான் இவை இரண்டையுமே ஏற்றுக் கொள்கிறேன்.இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதில் 95 சதவிகிதமாவது உண்மையாக இருக்க வாய்ப்புண்டு என்றே நம்புகிறேன்..

News Article from Dinamalar.com

has recommended that you check out this page at A List Apart:

http://www.dinamalar.com//varamalar/vmrnov-2311/varamalar10_2311.asp?

Good


This page was sent using our Send-to-Friend service.Your email address has
not been added to any list of any sort, and has not been recorded at our
site.

Saturday, November 22, 2008

கடவுள்கள் பைத்தியக்காரகளாக இருக்கவேண்டும்

கடவுள்கள் பைத்தியக்காரகளாக இருக்கவேண்டும்
கடவுள்கள் பைத்தியக்காரகளாக இருக்கவேண்டும், இல்லையென்றால் ஒரு கோக் பாட்டிலைக்கொண்டு ஒரு இனத்தின் சமூகத்தில் குழப்பம் விளைவிப்பாரா?இருபது வருடங்களுக்குமுன் எனது பள்ளிநாட்களின்போது மதுரை தீபா/ரூபா தியேட்டரில் (இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை) பார்த்த ஆங்கிலப்படமான "The Gods Must Be Crazy - I" பற்றித்தான் சொல்லுகிறேன். சிரிப்பு காட்சிகளும், நல்ல காட்சியமைப்புகளும், நடிகர்களின் அருமையான நடிப்பும் எனது உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டது. இப்படத்தின் கதையையும், நான் அனுபவித்த சந்தோஷத்தை உங்களிடம் பகிர்வதில் மேலும் சந்தோஷம் அடைகிறேன். இந்தப்படம் இரண்டு பாகமாக வந்துள்ளது, இரண்டுமே அருமையாக உள்ளன. இப்பதிவில் முதலாம் பாகத்தைப்பற்றி சொல்லுகிறேன்.தெனாப்பிரிக்காவின் தென்பகுதியில் உள்ளது கலஹாரி பாலைவனம், வருடத்தின் 9 மாதங்கள் மழை இல்லாமல் நீரோடைகள் எல்லாம் வற்றி குடிக்க ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் விலங்குகளெல்லாம் இடம் பெயர்கின்றன. மனிதர்கள் வாழத்தவிற்க்கும் அந்த இடத்தில் புதர்-மனிதர்கள்(bush man) என்றழைக்கப்படும் பழங்குடியினர்மட்டுமே வாழ்கின்றனர். கபடமில்லாமல், நட்புணர்வுடன் பழகி ஒரு சமூகமாக கூட்டம் கூட்டமாக வாழும் அவர்கள் வசிக்கும் இடத்தை கடக்கும் விமானத்திலிருந்து ஒரு காலியான கோக் பாட்டிலை கீழே எறிகிறார் அந்த விமானி. கடவுள் கொடுத்த பரிசாக அதை எண்ணி, பயன்படுத்துகிறார்கள் அந்த பழங்குடி மக்கள். ஆனால் வந்தது வினை, கடவுளின் பரிசுப்பொருளை பயன்படுத்துவதில் போட்டி, பொறாமை, சண்டை வந்துவிடுகிறது அவர்களுக்குள். என்னடா கடவுள் பரிசுப்பொருளோடு தீமைகளையும் சேர்த்து அனுப்பிவிட்டாரே கடவுளிடமே திருப்பிகொடுத்துவிடுவோம் என்று பார்த்தால் கடவுளும் திரும்பி வாங்கிக்கொள்ள மாட்டென் என்கிறார். சரி இது பூமியை சேர்ந்தது இல்லை ஆதலால் பூமிக்கு வெளியே எறிந்துவிடுவோம் என்று முடிவு செய்து. அவர்களில் ஒருவர் அதை எடுத்துக்கொண்டு பூமியின் முடிவுப்பகுதியை கண்டுபிடிக்க செல்கிறார். போகும் வழியே கிராமத்து மனிதர்கள், நவநாகரீக மனிதர்களை எல்லாம் சந்திக்க்கும் அவரின் அனுபவம் தான் இந்தப்படம். அனுபவம் என்றால் சாதாரனமான அனுபவம் அல்ல நன்பர்களே மனதைவிட்டு நீங்காத நினைவுகளாக்கும் அளவுக்கான அற்புதமான அனுபவங்களாகும்.இப்படத்தைப்பார்த்தவர்கள் இப்படத்தினைப்பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்தால் மேலும் மகிழ்ச்சிகொள்வேன். எனது DDLJ பதிவினை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.என்ன நன்பர்களே என்னுடன் கலஹாரி பாலைவனத்துக்கு வரத்தயாராக இருக்கின்றீர்களா? போவோமா?கருனை மிக்க புதர் மனிதர்கள்சாதாரனமான மனிதர்கள் தாகத்தால் சிலநாட்களுக்குள் மடியக்கூடிய தண்ணீரே கிடைக்காத அந்த இடத்தில் வாழும் கலையறிந்தவர்கள் அந்த புதர்-மனிதர்கள். செடிகளின் இலைகளில் படிந்த்திருக்கும் பணித்துளிகளை சேகரித்தல், பூமிக்கடியில் இருக்கும் ஒருவகை கிழங்கினை கண்டுபிடித்து அதிலிருக்கும் நீரை எடுத்தல் மேலும் தண்ணீர் இல்லாமலே வழ்ந்து பழக்கப்பட்டு அதன்மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கிறார்கள்.அவர்களுக்குள் குற்றங்கள் இல்லை, தண்டனைகள் இல்லை, தீவிரவ்வதங்கள் இல்லை, சட்டங்கள் இல்லை, காவலர்கள் இல்லை, தலைவர்க்ள் இல்லை அவர்கள் கடவுளை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்ட்களை மட்டும் நம்புகிறார்கள். அவர்களை பொறுத்தவரையில் இந்த உலகத்தில் கெட்டவைகள் எதுவுமே இல்லை. கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் கூட கெட்டவைகள் அல்ல, அது சுவையானது, அதன் தோல் மிக பயனுள்ளது.அவர்களின் ஒரு சமூகம் அவர்களின் மற்ற சமூகத்தை வருடத்துக்கு ஒருமுறைதான் சந்திக்கின்றனர். பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டே இருக்கின்றனர். அவர்களைத்தவிற மற்ற இனத்தோரை அறியாமலிருக்கின்றனர், மனித சமூகத்தைபற்றியே தெரியாமலிருக்கின்றனர்.படத்தின் கதாநாயகன் க்ஷிவானில் ஆகாயவிமானம் செல்லும்போது ஏற்ப்படும் சப்தத்தினை, கடவுள் நிறைய சாப்பிட்டதனால் உண்டாக்கும் ஏப்பம் என்று எண்ணிக்கொள்கின்றனர்., அவர்கள் மிகவும் மிருதுவானவர்கள், தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக மற்றும் கோபமாக பேசி அறியாதவர்கள். அதனால் குழந்தைகளும் மிகவும் நன்நடத்தை கொன்டோர்களாயிருக்கின்றனர்.பொருட்களை சொந்தம் கொன்டாடாமையே அவர்களை மற்ற இனத்தோரிடமிருந்து மிகவும் பிரித்துக்காட்டுகிறது. எல்லாமும் எல்லோருக்கும் சொந்தம் என்று நினைக்கிறார்கள் நம்புகிறார்கள்.அவர்களுக்கு உனவு தேவைப்படும் பட்சத்தில், தூக்கமருந்த்து கலந்த அம்பின்மூலம் மான்களை வேட்டையாடி, அதை கொல்லும் முன் அதனிடம் மன்னிப்பு கேட்டு, தன் குடும்பத்துக்கு உணவு தேவைப்படும் காரணத்தை சொல்லி, வேண்டி பிறகு கொன்று சாப்பிடுகின்றனர்.அவர்கள் மிகக்கடினமான பொருட்க்களாக கருதுவது மிருகங்களிம் எலும்புகளையும், மரங்களையும்தான்.அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 600 மைல்களுக்கு அப்பால், நாகரீக மணிதன் இருக்கின்றான். அவனைப்பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.வேட்டையாடிய மானிடம் மண்ணிப்பு கேட்டல்ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 600 மைல்களுக்கு அப்பால், நாகரீக மணிதன் இருக்கின்றான். வீட்டுக்கருகில் இருக்கும் தபால் பெட்டியில் தபாலை போடுவத்ற்க்கு கூட காரை உபயோக்கிக்கின்றான். வாழ்கையின் தேவைகளுக்கேற்ப்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல், வாழ்கையையே தனக்காக மாற்றிக்கொண்டவன். மிண்ணனு சாதனங்கள், வசதிகள் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்புகள், எப்படி இந்த போடிகள் நிறைந்த உலகில் தாக்குபிடிப்பது என்று போதிக்கின்றன. சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப்ப வாழும் முறையை மறுத்து, சூழ்நிலையை தனக்கு சாதகமாக்க துடிக்கின்றான்.நாகரீக மனிதர்கள்காலை 7.30 மனிக்கு சூழ்நிலையில் ஒன்ற ஆரம்பிக்கிறான். 8 மனிக்கு பணியில் சேர்கின்றான், 10.30 மணிக்கு 15 நிமிடம் ஓய்வெடுத்துக்கொள்கிறான், மீண்டும் சுறுசுறுப்பாக வேலையிலீடுபடுகின்றான். தினத்தின் நேரத்தின் ஓவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சூழ்நிலையில் பணியாற்றவேண்டிய நிலையிலிருக்கின்றான். திங்கள் கிழமையிலிருந்த்து வெள்ளி அல்லது சனிக்கிழமை வரை பரபரப்புதான்.காலை 7.30 மணிக்கு பரபரப்பு ஆரம்பித்துவிடுகிறதுஇங்கு படத்தின் கதாநாயகி கேத் ஒரு பதிப்பகத்தில் வேலை பார்ப்பதை காட்டுகிறார்கள். அவர் கலஹாரி பாலைவனத்துக்கருகில் உள்ள போட்ஸ்வானா கிரமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியை வேலைக்கு போக கேட்டுகொள்ளப்படுகிறார்.கலஹாரி பாலைவனத்திலுள்ள புதர்-மனிதர்களுக்கு எப்பொழுதுமே, திங்கள், வியாளன் அல்லது ஞாயிறுதான். கடிகாரமோ, காலண்டரோ அவர்களுக்கு கிடையாது.கதாநாயகி கேத் தாம்சன்புதர்மனிதர்கள் எப்போழுதாவது, வாணத்தில் வித்தியாசமாகு சப்தமிட்டுக்கொண்டு செல்லும் பறவையினை கான்கிறார்கள். அந்த பறவையானது சிறகுகளை அடித்துக்கொள்ளாமல், பறாக்கின்றது.ஆகாய விமானத்தைத்தான் அவர்கள் பறவை என்று என்னிக்கொள்கின்றாகள். அப்படித்தான் நமது கதாநாயாகன் க்க்ஷி ஒருமுறை கானகத்தில் வழியே நடந்துகொண்டு வந்திருக்கும் வேளையில், விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் ஒரு விமாணி ஒருவர் கோகோ-கோலா பாணத்தை குடித்துவிட்டு காலி பாட்டிலை விமானத்திலிருந்து கீழே எறிகிறார்.வினையை ஆரம்பித்து விட்டார்அது க்க்ஷி க்கு முன்னால் வந்து விழுகிறது. க்க்ஷி அதை பார்கிறார் அதுபோன்ற ஒருபொருளை வாழ்நாளில் பார்த்தது இல்லை. தண்ணீரைப்போல இருக்கிறது ஆனார், தான் பார்த்த பொருட்கள்ளிலேயே மிகாக்கடினமான பொருளாக இருக்கின்றது, இதை ஏன் கடவுள் இங்கு அனுப்பித்து வைத்தார்?கடவுள் கொடுத்த பரிசுஅதை எடுத்துக்கொண்டு தன் சமூகத்தாரிடம் செல்கின்றான். அது அவர்களுக்கு, மிக அழகான மற்றும் வித்தியாசமான பொருளாகப்படுகின்றதுஒரு தாத்தாவின் விரல் அதில் மாட்டிகொள்ள, குழந்தைகளுக்கோ ஒரே சிரிப்பு.என்ன இப்படிஒரு அழகான பரிசை கடவுள் அனுப்பியிருக்கின்றார்குழந்தைகளுக்கோ ஒரே சிரிப்புவிலங்குகளின் எலும்புகள், கடினமான மரத்துண்டுகள், கற்களையே உபயோகப்படுத்திக்கொண்டிருந்த அவர்களுக்கு, கடவுளின் அந்த பரிசு ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது. தானியங்களை இடித்து மாவாக்குதல், கிழங்குகளையும் கொட்டைகளையும் உடைத்தல், பதப்படுத்தப்பட்ட பாம்புத்தோலை மிருதுவாக்குதல், பாம்புத்தோலுக்கு வர்ணமிடல், அதன் தலைப்பகுதியில் காற்று ஊதி இசை எழுப்புதல் என்று பலவகையான உபயோகத்துக்கு உட்படுத்துகின்றனர்.நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதியதொரு உபயோகம்கடவுள் கொடுத்த பரிசுகளிலேயே இதுதான் மிக அற்புதம் என்று சொல்லி மகிழ்கிறார்கள். வேலையை மிச்சப்படுத்தும் உன்னதமான உபகரனமாக திரிகின்றது. ஒவ்வொருநாளும் புதுப்புது உபயோகங்களை கண்டு பிடிக்கின்றனர். கடவுளின் அந்த பரிசானது அவர்களின் வாழ்கைத்தேவைக்கு இன்றியமையாததாக ஆகிவிடுகிறது. அதை சார்ந்திருப்பதை தவிர்க்கமுடியாதது ஆகிவிடுகிறது.ஆனால் கடவுல் கவனக்குறைவாக இருந்துவிட்டார், ஆமாம் ஒரே ஒரு பரிசைமட்டுமெ அனுப்பித்துவிட்டார். ஒருவர் உபயோகப்படுத்தி கொண்டு இருக்கும்போது மற்றவர் காத்திருக்கவேண்டி இருக்கிறது. வாழ்கையில் முதல் தடவையாக ஒரு பொருளை மற்றவர்களோடு பகிர தயங்குகின்றனர். சடாரென ஒவ்வொருவரும் அதை நீண்டநேரம் வைத்துக்கொள்ள நினைக்கின்றார்கள்.இதுவரை அறிந்திராத மற்றும் அனுபவித்திராத மனவெழுச்சியெல்லாம் உணர்கிறார்கள். அனுமதி கேட்காமலேயே மற்றவரிடம் இருந்து எடுத்துக்கொள்வது, என்னடா இப்படி பிடுங்கிக்கொண்டானே என்ற வருத்தம் போன்ற பழகியிராத உணர்ச்சிகள், உத்வேகங்கள் எல்லாம் தோன்றுகின்றன. நாமே சொந்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது.க்ஷி எல்லாவறையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார், மனதில் கவலை வருகிறது, கடவுளின் இந்தபரிசானது தேவை இல்லாத சங்கதிகளையெல்லாம் நம் சமூகத்தில் உருவாக்குகிறதே என்று வருத்தம் மனதில் சூழ்கிறது.நிலமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே போகின்றது. கோபம், பொறாமை, வெறுப்பு முடிவில் கைகலப்பும் ஆரம்பித்துவிடுகிறது. குழுவில் ஒரு பென்ன்னவள் கடவுளின் அந்த பரிசை உபயோகப்படுத்தி கொண்டு இருக்கும்போது இன்னொரு பென் அதை பிடுங்கிக்கொண்டு போகிறாள். அதைக்கண்ட அந்த முதல் பென் கோபம் கொண்டு மறுபடியும் அவரிடமிருந்து பிடுங்கிக்கொள்கிறார். அது கைகலப்பாகிவிடுகிறது. குழந்தைகள் எல்லாம் தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு என்னடா வித்தியாசமான சூழ்நிலையாக இருக்குதேன்னு பாக்குறாங்க. பெரியவர்களோ இப்படி ஒரு நிலையை சந்தித்ததே இல்லை என்பதால், அவர்களை விலக்கிவிடக்கூட தோன்றாமல் கவலை தோய்ந்த முகத்துடன் பார்க்கின்றார்கள்.ஒரு பென் இன்னொரு பென்னின் தலையில் அந்த பரிசுப்பொருளினால் ஓங்கி அடித்துவிடுகிறார், ரத்தம் பீரிடுகிறதுபரிசுப்பொருளுக்காக கைகலப்புஇதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த க்ஷி க்கு கடவுளின்மீது கோபம் வந்துவிடுகிறது. வானத்தை நோக்கி கத்துகிறார், உன்னுடைய பொருளை நீ திரும்பி எடுத்துக்கொள், எங்களுக்கு இது தேவையில்லை. இது கொண்டுவந்த பிரச்சினைகளைப்பார், என்று கத்தி, கடவுளின் அந்த பரிசுப்பொருளை வாணத்தை நோக்கி எறிகிறார். ஆனால் கடவுள் அதை திரும்ப எடுத்துக்கொள்ள மறுக்கின்றார், அது கீழே வந்து விழுகிறது. மறுபடியும் கத்துகிறார், இப்படிப்பட்ட ஒரு பொருளை எங்களுக்கு அனுப்பியதற்கு நீ பைத்தியமாகத்தான் இருக்கனும், திரும்ப எடுத்துக்கொள் என்று மீண்டும் வாணத்தை நோக்கி எறிகிறார், ஆனால் க்ஷி யின் வேண்டுகோள் இந்தமுறையும் நிராகரிக்கப்படுகிறது மீண்டும் கீழே நோக்கி வருகிறது, வந்து ஒரு சிறுமியின் மண்டையை பதம் பார்க்கிறது. கடவுளின் பொறுப்பற்ற தன்மையை நொந்துகொண்டே அதை எடுத்துப்பொய் ஒரு குழிதோண்டி புதைத்துவிடுகிறார்.மாலையில் எப்பொழும் அனைவரும் ஒன்றாக அமர்ந்த்து சிரிப்பு, கேலி, கிண்டலோடு சந்தோஷமாக உரையாடும் பழக்கம் கொண்ட அவர்களுக்கு அந்த மாலைப்பொழுது சந்திப்பு, அமைதியாக நடக்கிறது, யாருமே பேசத்தயாராக இல்லை. இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்டோமே என்ற அவமான உணர்வு ஒவ்வொருவரையும் பிடுங்குகிறது. க்ஷி சொல்லுகிறார், யாரும் கவைப்படாதீர்கள், நான் அந்த பரிசுப்பொருளை குழியில் புதைத்துவிட்டேன், அது நம்மை மீண்டும் சங்கடங்களுக்கு உள்ளாக்காது.ஆனால் க்ஷி யின் நினைப்பு நடக்கவில்லை, ரத்தம் தோய்ந்த அந்த பாட்டிலை போப்பம் பிடித்த கழுதைப்புலி ஒன்று இரவில் தோண்டி வெளியே எடுத்துபோடு விடுகிறது. மறுநாள் காலையில் அதை எடுக்கும் இரண்டு சிறுவர்களுக்குள் அதை வைத்துக்கொள்ளும் போட்டியில் சண்டை வந்து மீண்டும் ஒரு சிறுவனின் மண்டை இன்னொசிறுவனால், அந்த்த பரிசுப்பொருளின் மூலம் உடைக்கப்படுகிறது.அன்றிரவு சந்திப்பின் போது அனைவரும் மிக்க கவலைகொண்டோராக இருக்கின்றார்கள். அதுக்கு அப்பொழுதுதான் ஒரு பெயரிடவேண்டும் என்று தோன்றுகிறது, அதை தீமையான-பொருள் என்று அழைக்கின்றனர். வயதான ஒரு பெரியவர் சொல்கிறார், கடவுள் இந்த தீமையான-பொருளை கீழே அனுப்பும் போது தன்நிலை மறந்தவராக இருந்திருப்பர் போல. கடவுள்கல் எப்பவுமே நமக்கு மழை, மரங்கள், கிழங்குகள், பழங்கள், விலங்குகள் போன்ற நல்ல பொருட்களைமட்டுமே அனுப்பியிருக்கின்றனர், எனென்றால் நாமெல்லாம் அவர்களின் குழந்தைகள், நம்மில் அதிகமான விருப்பம் கொண்டோராக இருக்கின்றனர். ஆனால் இப்பொழுதோ இப்படி ஒரு தீமையான ஒரு பொருளை அனுப்பி இருக்கின்றனர்.இப்படி தீமையான-பொருளை கடவுள் அனுப்பிவிட்டாரேக்ஷி சொல்லுகிறார், இது இந்த பூமியை சேர்ந்த பொருள் இல்லை, நாளை பூமியின் முடிவுப்பகுதிக்கு எடுத்துச்சென்று வெளியே எறிந்துவிடுகிறேன்.பெரியவர் சொல்லுகிறார், பூமியின் முடிவுப்பகுதி, அதிக தொலைவில் உள்ளது என்று நினைக்கிறேன், நீ நடந்து செல்வதுக்கு 20 லிருந்து 40 நாட்கள் ஆகலாம்.நாளை காலையில் நான் நடக்க ஆரம்பிக்கின்றேன் என்று க்ஷி சொல்லுகிறார். அனைவரும் ஒப்புக்கொள்வதாக முடிவு செய்கின்றனர். க்ஷி யின் பயனம் வெற்றிகரமாக முடிய வாழ்த்தி விடைகொடுக்கிறாகள்.பயனம் வெற்றிகரமாக முடிய வாழ்த்தி விடைகொடுக்கிறாகள்2000 மயில்களுக்கப்பால் பிரானி நகரில் ஒருப்பிரச்சினை நடக்கிறது. நாட்டின் அமைச்சர்கள் அதிபரின் தலைமையில் அரசாங்க அலுவலகத்தின் ஒரு அறையில் ஒருசந்த்திப்பில் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்தைஎதிர்க்கும் 10 பேர்கள் கொண்ட, தீவிரவாதக்குழு ஒன்று அறைக்குள் புகுந்த்து அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சிக்கின்றது. மூன்று அமைச்சர்கள் கொல்லப்படுகின்றனர். குறிவைக்கப்பட்ட நாட்டின் அதிபர், தப்பிவிடுகிறார். விசாரனையில் அவர்கள் சம்போகா என்னும் பெயருள்ள ஒருவனை தலைவராகக்கொண்டு செயல்படும் தீவிரவாதக்குழு என்று தெரிகிறது. தீவிரவாதக்குழுவினர் சுட்டுவிட்டு தப்பிக்க முயலுகையில் அவர்களில் இரண்டுபேர் காவலர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். தலைவன் இருக்கும் இடத்தை காட்டிக்கொடுக்க மறுக்கின்றார்கள்.காயமடைந்த அதிபர்மாட்டிக்கொண்ட இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றும்படி தலைமைக்காவலர் உத்தரவிடுகின்றார். தப்பியோடியவர்களை தேடி பின்தொடர்ந்து ஒரு பீரங்கி வாகனம் செல்கிறது.மாட்டிக்கொண்ட இருவரிடமிருந்தும் உண்மையை வரவழைக்க நூதன திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகின்றது.ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்ட இருவரின் கண்களும் கட்டப்படுகின்றன. ஹெலிகாப்டர் உயரே பறக்க ஆரம்பிக்கின்றது. விசாரனை ஆரம்பமாகின்றது, மீண்டும் காட்டிக்கொடுக்க மறுக்கிறார்கள், தலைமைக்காவலர் கோவம் வந்து, அவர்களில் ஒருவனை பிடித்து பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் இருந்து வெளியே தள்ளிவிடுகின்றார், கீழே விழும் அவன் அலறித்துடித்தபடி, தன் தலைவன் இருக்கும் இடத்தைபற்றி சொல்லிவிடுகின்றான். உண்மையில் ஹெலிகாப்டர் மேலே பறக்கவேஇல்லை, சும்மா இறக்கைகளைமட்டும் சுழல விட்டபடி, தரையிலேயே நின்றுகொண்டிருக்கின்றது. கீழே விழுந்தவன் வானில் உயரத்திலிருந்து விழுகின்றோம் என்று எண்ணி உண்மையை சொல்லிவிடுகின்றான்.கண்களைக்கட்டி உயரே கொண்டு சென்றுஹெலிகாப்டரில் இருப்பவர்களும், பீரங்கி வாகண காவலர்களும், ஒன்றாக சேர்ந்த்து தீவிரவாதிகள் இருக்கும் இடத்துக்கு சென்று தாக்குதல் நடத்துகிறார்கள். தீவிரவாதக்குழுக்கள் தாக்குப்பிடிக்க முடியாமல், இரண்டு ஜீப்பில் ஏறி, தப்பி ஓடுகின்றனர், அவர்கள் தப்பி ஓடுவது கலஹாரி காட்டுக்குள். இந்த தீவிரவாதி குழுதலைவன், மற்றும் மற்றவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான் குனாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பர். அதில் இருவர் யாருடனும் பேச மாட்டார்கள் ஆனால் எப்பொழுபார்த்தாலும் அவர்கள் இருவர் மட்டும், சீட்டு விளையாண்டுகொண்டே இருப்பார்கள். காட்சிகளும் நகைச்சுவையாக எடுத்திருப்பர்.தீவிரவாதிகளின் தலைவர், தீராதவியாதிகளின் தலைவர் இருப்பார்இடையில் க்ஷி காட்டினுள் செல்லும்போது தண்ணீர் குடிக்க அந்த பாட்டிலை கீழே வைக்கும் பொழுது ஒரு குரங்கு அதை எடுத்துக்கொண்டு ஓடுகிறது. க்ஷி அதை விரட்டிக்கொண்டு ஓடுகிறார். அது ஒரு மரத்தின்மேல் சென்று அமர்ந்துகொள்கிறது,குரங்கிடம் வெகு சிரத்தையாக அதைப்பற்றி சொல்ல ஆரம்பிக்கின்றார்.நீ வைத்திருப்பது எவ்வளவு தீமை நிறைந்தது தெரியுமா? நீ அதை திருப்பி என்னிடம் கொடுத்துவிடுவதுதான் உனக்கு நல்லது, நான் அதை இந்த பூமியை விட்டு வெளியே எறிந்துவிடுவேன். இது நிறைய சங்கடங்களையும் கஷ்டங்களையும் என் குடும்பத்துக்கு கொண்டு வந்தது. நீ அதை என்னிடம் கொடுக்காவிட்டால், உன் குடும்பத்துக்கும் அதே கஷ்டங்கள் வரும். குரங்கு கவனிக்கும் வரையில், மிகவும் பொறுமையாகவும், சிரத்தையாகவும் பேசுகின்றார்.குரங்கு எப்படி சமாதானமானதோ, அந்த பாட்டிலை கீழே போட்டுவிடுகிறது. குரங்கின் புத்திசாலித்தனத்தை பாராட்டிவிட்டு பயனத்தை தொடர்கின்றார்.திருப்பி கொடுத்துவிடுவதுதான் உனக்கு நல்லதுகலகாரி பாலைவனக்காட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய ஊர், போட்ஸ்வானா பேருந்து வசதிகள் உண்டு, நம்ம நிலக்கோட்டை போன்ற ஊர். அதுக்கருகில் உள்ள ஒரு கிராமம் மபுலா, அங்கு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியையாக கதாநாயகி கேத் தாம்சன் வருகிறார். மபுலா கிராமத்தில் மிருகங்களைப்பற்றி ஆராய்ச்சிசெய்யும் டாக்டர் ஆண்ட்ரு-ஸ்டேன். மிகவும் நட்ப்புணர்வுடன் எல்லோரிடமும் பழகும் இவரின் செய்கைகள் சிரிப்பை வரவழைக்கும்படி இருக்கும். சார்லி-சாப்ளினை நினைவுபடுத்துவதுபோல இருக்கும். இவர்தான் படத்தின் இரண்டாம் நாயகர்.படத்தின் இரண்டாம் நாயகன் ஸ்டேன்இவர் ஒரு ஜீப் வைத்திருப்பர் பாருங்கள், உலகத்தின் பாடாவதி ஜீப் அதுவாகத்தான் இருக்கும். கை பிரேக் கிடையாது, இஞ்சின் நின்றுவிட்டால் மறுபடியும் ஆரம்பிக்காது, கதவுகளை திறக்க லாவகம் தேவை, நுட்ப்பம் தெரிந்தவர்கள்மட்டுமே திறக்க முடியும், முன்பக்க கன்னாடிகள் கிடையாது. இந்த காரைவைத்து நிறைய நகைச்சுவைக்காட்சிகள் உள்ளன. இந்த கார்தான் மூன்றாவது நாயகன்.மூன்றாவது நாயகனை கிளப்ப குதிரையின் தயவு தேவைபோட்ஸ்வான ஊரிலிருந்து மபுலா கிராமத்துக்கு பேருந்து வசதி கிடையாது. எனவே, போட்ஸ்வானவுக்கு பஸ்ஸில் வரும் நாயகி கேத் அவர்களை தனது ஜீப் மூலம், மபுலா வுக்கு அழைத்துவர நட்பின்பேரில் கேட்டுக்கொள்ளப்படுகிறார் ஸ்டேன். அவரும் சரியென்று கிளம்புகின்றார், காரி கிளப்புவத்ற்கே குதிரையின் தயவு வேண்டியிருக்கின்றது. போகும் வழியில், காரை வைத்து நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ளுகிறார். கை பிரேக் கிடையாது, இஞ்சின் நின்றுவிட்டால், மீண்டும் கிளம்பாது எனவே, ஒரே ஆளாக காரையும் சமாளித்து வழியில் எதிர்ப்படும் ஆளில்லா வாயில்-கதவுகளை திறந்து மூடுவதற்கு சிரமப்படுகிறார், நகைச்சுவையாய் செல்கிறது. ஒருவழியாக நாயகி இருக்கும் இடத்துக்கு சென்று அழைத்து வருகிறார்,கன்னாடியை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று இல்லாத கன்னாடியில் சோப்புநுரை அடித்து, நாயகியின் முகத்தில் ப்பபபச்ச்ச்சசக்நாயகிக்கோ ஜீப்பின் மகத்துவம் பற்றி தெரியாது. ஓரிடத்தில், வாயில்-கதவௌ எதிர்ப்பட, ஸ்டேன் ஜீப்பை மெதுவாக ஒட்டிச்சென்று, ஓடியபடியே கீழே இறங்கி, கதவை திறந்து ஜீப் போனப்புறம் மூடி, பிறகு ஓடிச்சென்று ஜீப்பில் எறத்திட்டமிட்டு ஜீப்பைவிட்டுன் கீழே குதிக்கிறார், இதுபற்றி தெரியாத நாயகியோ, என்னடா இப்படி ஓடும் காரிலிருந்து கீழே குதித்துவிட்டானே என்று அலறுகிறார். விஷயம் அறிந்து திட்டுகிறார், ஸ்டேன் மீது ஒரு குழப்பமான அபிப்பிராயம் வருகிறது.ஆ...ஆ...ஆ... இந்த ஆளைப்பாருங்களேன், ஒடும் ஜீபில் என்னை தவிக்கவிட்டு கீழெ தாவிவிட்டான்நமது நாயகன் க்ஷி, காட்டு வழியில் வரும்பொழுது, கிராமவாசி ஒருவன் வேட்டையாடும் களைப்பாற, துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு ஆனந்தமாக பாட்டுப்பாடிக்கொண்டிருக்கின்றான். அதைப்பார்க்கும் க்ஷி, பார்ப்பதற்க்கு வித்தியாசமாக இருக்கும் இந்த மனிதன் நம்மை வாழ்த்தி வரவேற்கின்றானே, ஆனால் நம்மை கவனிக்காமல் இருக்கின்றானே என்று ஆச்சரியமாக பார்க்கிறார்.அருகில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து அழகான குச்சியாக இருக்கிறதே, என்று என்னி, கிராமத்தானிடம் கேட்க்கிறார், என்னது இது எந்த மரத்தில் இது வளர்ந்தது? க்ஷியின் பாசை புரியாத கிராமத்தான், துப்பாக்கியும், வில்லுமாக ஆதிவாசி ஒருவன் மிரட்டுவதைப்பார்த்து கைகளை உயர்த்தி சரனடைகின்றான்.நின்னை சரனடைந்தேன்பின் அலறித்துடித்தபடி தப்பித்து ஓடுகிறான், அதைப்பர்த்த க்ஷி, என்னடா இது எதைப்பார்த்து இப்படி ஓடுகிறான்? பின்னால் எதோ ஒரு மிருகம் வருதுபோல என்று என்னி அவரும் தப்பிக்க ஓடுகிறார்.ஆகா என்னமோ வருதுடாஉயிர் தபிக்க ஓடுபிறகு பின்னால் எதுமே வராததைப்பர்த்து நின்று யோசித்ததில், பளீரென உண்மை புலப்படுகிறது, தான் கையில் வைத்திருக்கும் தீமை நிறைந்த இப்பொருளைப்பார்த்துதான் இப்படி அலறித்துடித்து ஓடியிருக்கின்றான். இப்படி ஒரு தீமையான-பொருளை எடுத்தும் நல்ல மக்களையும் துன்புறுத்துகின்றோமே என்று நொந்தபடி, பூமியின் முடிவைத்தேடி பயனத்தை தொடர்கிறார்.ச்ச்சே இதைவைத்து நல்ல மனிதர்களையும் துன்புறுத்துகிறோமேஸ்டேன் மற்றும் கேத் வரும்வழியில், ஜீப் இரு ஆற்றை கடக்கும்போது நடுஆற்றில் நின்றுவிடுகிறது. சேருமிடத்துக்கு இன்னும் 30 மைல்கள் போகவேண்டும், ஆனால் ஜீப் பழுதடைந்த்துவிட்டது, ஊருக்குள் தகவல் அனுப்பி ஆளை வரச்செய்து, சரிபன்ன உடனே முடியாது, மாலையாகிவிட்டது, காலையில்தான் யாரும் வருவர், எனவே இரவு அந்த காட்டிலேயே தங்க முடிவு செய்கின்றனர். கேத் உடம்பில் தண்ணீர் படாமல் கரைக்கு அழைத்துச்செல்கின்றேன் என்று அவரை தூக்கிச்செல்கிறார் ஸ்டேன், வெற்றிகரமாக கரையை நெருங்கியாயிற்று, கீழே இறக்கிவிடும்போது கால் இடறி ஆறுக்குள் விழுகிறார் கேத். ஒழுங்காக நடந்துவந்தாலாவது கால் மட்டும் நனைந்திருக்கும், தூக்கிவருகிறேன் பேர்வழி என்று மொத்தமாக நனைத்துவிட்ட ஸ்டேன் மீது கேது க்கு பயங்கரமான கோபம் வருகிறது. ஸ்டேனுக்கோ என்னட இது, இப்படி ஒரு பென்னுடன் தனியாக வரும் சந்தர்ப்பம் கிடைத்தும் இப்படி சொதப்புறோமே என்று வருத்தம் உண்டாகிறது. செய்த தவறுகளை ஈடுகட்டி, கேத் இடம் நல்லபேர் வாங்கவேன்டும் என்று நினைக்கிறார்.நனையாமல் தூக்கிச்சென்றுகரைக்கு வந்து இருவரும் தனித்தனியே சென்று உடைமாற்றுகிறார்கள், ஸ்டேன் உள்ளடையுடன் இருக்கும்போதுதானா ஒரு காட்டுப்பன்றி அவரை துரத்தவேண்டும், அவர் விழுந்தடித்துக்கொண்டு ஓடி, அங்உ உள்ளாடைகளுடன் மறைவில் நின்றுகொண்டிருக்கும் கேத் மீது மோதி விழுகிறார். கேத்துக்கோ பயங்கர எரிச்சல், வேண்டுமென்றே உடைமாற்றும் வேளையில் அரைகுறை ஆடையுடன் தப்பான நோக்கத்தில் வந்திருக்கின்றார் என்று என்னுகிறார். ஸ்டேன் சொல்லும் காரனத்தை கேத் காதுகொடுத்து கேட்கமாட்டேன் என்கிறார், ஒரு கம்பைஎடுத்து தற்காக்கும் நோக்கில், ஸ்டேனை விரட்டுகிறார். காரணத்தை விளக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்படாமலேயே சோகத்துடன் ஸ்டேன் இடத்தைவிட்டு அகலுகிறார்.ஆனையிட்டேன் நெருங்காதேஇரவு இரண்டுபேரும் தீ மூட்டி காபி தயாரித்து குளிர் காய்ந்த்துகொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தூரத்தில் ஒரு காண்டாமிருகம் வருவதை ஸ்டேன் பார்த்துவிடுகிறார், காட்டில் எங்கேனும் தீப்பிடித்தால் அதை மனல்கொண்டு அனைப்பதுதான் காண்டமிருகத்தில் வேலை. ஸ்டேன் காண்டமிருகத்தை பார்த்ததும் ஒடு ஓடு என்று கூக்குரலிட்டவாரே கேத்தை தள்ளிவிட்டு ஓடுகிறார். கேத்துக்கோ ஒன்றும் புரியவில்லை, அவர் காண்டாமிருகத்தை பார்க்கவில்லை, ஸ்டேன் ஒடு என்று கத்தி மூர்க்கத்தனாமாக மோதிய ஒன்றுமட்டுமே தெரிகிறது. கண்ணை மூடிக்கொண்டு ஓடி ஒரு மரத்தில் ஏறி அமர்ந்துவிடுகிறார். அதற்க்குள் காண்டாமிருகம் தீயை அனைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு போய்விடுகிறது. காண்டாமிருகம் வந்ததையோ அது தீயை அனைத்ததையோ, கேத் பார்க்கவில்லை, அவர் மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கீழே பார்க்கையில், சரியாக அனையாமல் இருக்கும் தீயை ஸ்டேன் அனைப்பதைப்பார்க்கிறார். என்னடா இது நம்மை ஓடசொல்லிவிட்டு தீயை அனைத்துக்கொண்டிருக்கின்றாரே, என்னமாதிரியான பைத்தியக்காரத்தனம்? ஸ்டேன் என்னமாதிரியான ஆள் என்று தீர்மானம் செய்யமுடியாமல் குழம்புகிறார். கீழே இறங்கி வந்தபிறகு, சொல்லுகிறார், காண்டாமிருகம் வந்து தீயை அனைத்துவிட்டு போய்விட்டது என்று, ஆனால் கெத்துக்கோ பயங்கரகோபம், தானே தீயை அனைத்துவிட்டு, இல்லாத காண்டாமிருகத்தின் மீது பழிபோடுகிறானே என்று. என்ன கதை விடுகிறீர்கள், நீங்கள் அனைப்பதை நாந்தான் பார்த்தேனே என்கிறார். இது கதை இல்லை பாருங்கள் மறுபடியும் தீயை மூட்டுகிறேன் காண்டாமிருகம் வரும் என்று சொல்லி தீயை மூட்டினால் காண்டாமிருகம் வரவே இல்லை, அதுக்கு பதிலாக காட்டுவாசிகள் இருவர் வந்து ஏன் தீயை மூட்டுகிறீர்கள், காண்டாமிருகம் வரும் என்று அவர்கள் பாஷையில் சொல்லுகிறார்கள். ஸ்டேன் கேத்திடம் சொல்லுகிறார், பார்தீர்களா இவர்களும் சொல்லுகிறார்கள், ஆனால் காட்டுவாசிகள் மொழி கேத்துக்கு புரியாததால், சந்தேகம் கொள்கிறார். இரவில் தூங்கிஎழுந்து காட்டுவாசிகளிடம் ஊருக்குல் உதவிகேட்டு தகவல் அனுப்புகிறார்.என்ன மோதி தள்ளி ஓடச்சொல்லிவிட்டு அடுப்புத்தீயை அனைத்துக்கொண்டிருக்கின்றானே????!!!!!ஆற்றின் நடுவில் சிக்கிக்கொண்ட ஜீப்பை வெளியே இழுக்கலாம் என்று என்னி. ஜீப்பின் முன்புறம் உள்ள இழுவை மோட்டாரில் உள்ள நீள கயிற்றை கரை வரைக்கும் இருத்து நுனியில் உள்ள கொக்கியை ஒரு மரத்தின் உச்சியில் மாட்டிவிட்டு, மோட்டார் மூலம் இழுக்கச்செய்கிறார். அந்நேரம், கேத் ஒருவகையான முள்செடியிடம் மாட்டிக்கொள்கிறார், சிறிய மற்றும் நிறைய கிளைகளையுடைய அந்த செடியில் சிறிது சிறிதாக நிறைய முற்கள் உள்ளன, ஆள்மாட்டினால், விடுபடுவது சிரமம், விடுபடும் முயற்சியில் மேலும் மாட்டிக்கொள்ளத்தான் முடியும். உள்ளாடைகளுடன் மாட்டிக்கொண்ட கேத் என்னசெய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். வேறுவழியில்லாமல் ஸ்டேனை அழைக்கிறார், கண்ணைமூடிக்கொண்டு தன்னை பார்க்காமல் உதவிசெய்து, முள்செடியிலிருந்து விடுவிக்கச்சொல்கிறார், ஸ்டேனும் கண்ணை மூடிக்கொண்டு, கடுமையாக போராடி அவரை விடுவிக்கிறார்.கண் திறந்து பாராமல் உதவிவேலையை முடித்துவிட்டு ஜீப்பை வந்துபார்த்தால் ஜீப்பை கானோம், என்னடா ஜீப்பைகானோமே என்று குழம்பி கொக்கிமாட்டிய மரத்தின் உச்சியில் பார்த்தால் ஜீப் மரத்தின் உச்சிக்கு சென்று ஊஞ்சலாடிக்கொண்டிருக்கின்றது. தலையில் கைவைத்து உட்கார்ந்துவிடுகிறார்.எங்கே என் ஜீப்?????உச்சானிக்கொம்பில் ஊஞ்சலாட்டம்.அந்தவழியாக வரும் நம் நாயகன் க்ஷி, தன் வாழ்நாளில் கன்டிராத அசிங்கத்துடன், அவலட்சன உருவத்துடன் இருக்கும் நபரை பார்க்கிறார், அந்தநபர் கேத் அவர்கள்தான். பெரிய உருவத்துடன், வெந்நிறமாக, வித்தியாசமான தலைமுடிகளுடன், மிகவயதான தோறத்துடன் இருக்கும் இவள் யார்?. இந்த வெப்பமான சூழலிலும், நிறைய உடை அனித்திருக்கின்றாளே? க்ஷியை பார்த்த கேத்துக்கு அதிர்ச்சி, காட்டுவாசி ஒருவன் தான் உடைமாற்றுவதை பார்த்துகொண்டிருப்பதை கண்டு கோபம், விலக்கிப்போகச்சொல்லுகிறார். அது எப்படி க்ஷி க்கு புரியும்?சடாரென க்ஷி க்கு ஒரு என்னம் பளிச்சிடுகிறது, ஒருவேளை நாம் தேடிக்கொண்டிருக்கும் கடவுள் இவராக இருக்குமோ? ஆமாம் இவர் கடவுள்தான் சந்தேகமே இல்லை. க்ஷி க்கு ஆச்சரியாம் தாங்கமுடியவில்லை, பூமியில் அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்று. ஆனால் க்ஷி க்கு நிரம்ப மகிழ்ச்சி, ஏனென்றால் அந்த தீமையான-பொருளை இவரிடம் கொடுத்துவிடலாமே. உடனே சொல்லுகிறார், எனக்கு இது தேவைஇல்லை, நீங்கள் இதை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். கேத் அதை காதிலே வாங்காமல், இடத்தை விட்டு அகலுவதையே குறியாக இருக்கிறார். இப்படி அடவடியாக கடவுளிருக்கின்றாரே என்று க்ஷி க்கு மிக்க வருத்தமாகிவிடுகிறது.கடவுள் இப்படி அடாவடியாக நடந்துகொள்கிறாரே?கேத்தை பின்தொடர்ந்து வந்து பார்த்தால், அங்கு இன்னொரு கடவுள் இருப்பதைபார்த்து க்ஷிக்கு ரெம்ப சந்தோஷம், இந்தகடவுள் தனக்குள் தீயை வைத்திருக்கின்றாரே, வாயிலும் மூக்கின் வழியிலும் புகையை வெளியிடுகிறாரே!.நீங்கள் எங்களுக்கை இதை அனுப்பியது உங்களின் நல்ல மனதையும் தன்மையையும் காட்டுகிறது, ஆனால் இது எங்கள் குடும்பங்களுக்கு நிறைய கஷ்டங்களை தந்துவிட்டது, தயவுசெய்து இதை எடுத்துக்கொள்ளுங்கள்.உடம்புக்குள் நெருப்பை வைத்துக்கொண்டு இன்னொரு கடவுள்புதர்மனிதன் ஒருவன் கோக் பாட்டிலை நீட்டி எதோ சொல்லுகிறானே என்று இருவரும் குழம்புகிறார்கள். மரத்தின் உச்சியில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜீப்பை பார்த்து கேத்துக்கு அதிர்ச்சியாகிவிடுகிறது, அப்பொழுது க்ஷி நித்தியாசமான சப்தத்தினை கேட்கிறார், என்னவென்று பார்த்தால், ஆச்சரியப்படத்தக்க விலங்கு அவர்களை நெருங்குகிறது. நட்க்கும்போது அதன் கால்கள் மேலும் கீழும் இயங்காமல், சுழல்கிறது, அந்தவிலங்இன் மீது ஒரு கடவுளும் அமர்ந்து வருகிறார், தலையில் நீலநிற தோல் இருக்கிறது, உடம்பில் சிகப்பு நிற தோல் இருக்கிறது. முகத்திலும்கூட முடி இருக்கிறது.அது வேறு யாரும் இல்லை, ஸ்னுக்கு உதவ வந்த கிராமத்து ஆள்தான். அவருக்கு புதர்மனிதர்களின் மொழி புரியும், பேசவும் முடியும். அவர் ஸ்டேனிடம் என்ன நடந்தது என்று வினவுகிறார்.அவர் பேசுவது க்ஷிக்கு ஆச்சரியம், என்னடா கடவுள் குரங்குபோல சப்தமிடுகிறார் என்று.அவர், க்ஷியிடம் என்ன வேண்டுமென்று அவர்கள் மொழியில் கேட்கிறார், க்ஷிக்கு ஆனந்தம், ஆஹா இந்தகடவுளுக்காவது பேச முடிகிறதே என்று. க்ஷி சொல்லுவதை மொழிபெயர்த்து ஸ்டேனிடம் சொல்லுகிறார்.நீங்கள் கொடுத்த இந்த பாட்டிலுக்கு நன்றி, ஆனால் இதை திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்.நான் எதையுமே கொடுக்கவில்லையே.ஆனால் இவனுக்கு இது வேண்டாமாம்.அப்படியென்றால் இதை கீழே போட்டுவிட்டு போகவேண்டியதுதானே?அதை மொழிபெயர்த்து சொல்லுகிறார், "எங்களுக்கு இது வேண்டாம், இதை நீயே கீழெ எறிந்துவிடு"க்ஷிக்கு மிகவும் ஏமாற்றமாக போய்விடுகிறது. தன்னையே பூமியின் முடிவுப்பகுதிக்கு சென்று எறியும்படி செய்த கடவுள்களின் பொறுப்பின்மையை நொந்தபடி மீண்டும் பயனத்தை தொடர்கிறார். உன்மையிலேயே இவர்கள் கடவுள்கள்தானா என்று சந்தேகம் வந்துவிடுகிறது.ஆஹா இந்தகடவுளுக்காவது பேச முடிகிறதேஒருவழியாக கேத் கிரமத்துக்கு வந்து சேர்கிறார், கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்றாக பாட்டுப்படி, வரவேற்பு கொடுப்பதைப்பார்த்து நெகிழ்ந்துபோய்விடுகிறார்.ஊரே சேர்ந்து வாழ்த்துப்பாடல்தீவிரவாத கும்பல் ஒன்று உருக்குள் வந்துகொண்டிருப்பதை வானொலியில் செய்தியாக சொல்லுகின்றனர்.உருக்குள் வந்துகொண்டிருக்கும் தீவிரவாத கும்பல்மேய்ந்துகொண்டிருக்கும் ஆட்டுமந்தையை க்ஷி பார்க்கிறார், வித்தியாசமான விலங்குகளாக இருக்கின்றனவே ஆனால் சாப்பிடுவதற்க்கு சுவையாகத்தான் இருக்கவேண்டும். பசியுடன் இருக்கும் க்ஷி ஒரு ஆட்டை வேட்டையாட முடிவுசெய்து, பதுங்கிச்சென்று மயக்கமருந்த்து கொண்ட அம்பினால் ஒரு ஆட்டை அடிக்கின்றார். அதைப்பர்த்த மந்தையை மேய்க்கும் சிறுவன், கத்துகிறார். க்ஷி அவனை சமாதான படுத்துகிறார், நான் ஒன்றை தாக்கியிருக்கிறென், அது சீக்கிரம் தூக்கத்துக்கு சென்றுவிடும் நாம் இருவரும் சேர்ந்து அதை சாப்பிடலாம். ஆனால் அச்சிறுவன் அங்கிருந்து ஓடுகிறான், அதைக்கண்ட க்ஷி, என்னடா இப்படி ஓடுகிறான், ஒருவேளை விருந்துக்கு தன் குடும்பத்தினரையும் அழைக்கா போயிருக்கான் போல.பதுங்கிச்சென்று குறிபார்த்துமயங்கி விழுந்துவிட்ட ஆட்டினை வாட்டுவதற்காக, தீ மூட்டி தார்செய்கிறார் நம்ம நாயகன், அப்பொழுது வித்தியாசமாக சப்தமிட்டுக்கொண்டே ஒரு பெரிய விலங்கு அருகே வந்து நிற்கின்றது, இதுவும் நீண்டகால்களுக்குப்பதிலாக, சுழலும் வகையில், வட்டவடிவ கால்களை கொன்டதாயிருக்கிறது. அதிலிருந்த்து ஒடிய சிறுவனும், இன்னொருவரும் இறங்குகிறார்கள். (பெரிய காரிலிருந்து ஆடுமேய்க்கும்சிறுவனும், காவலரும் தான் இறங்குகிறார்கள்). க்ஷி மிகமும் மகிழ்ந்தவராக, வாருங்கள் கீழே வந்து உட்கருங்கள், நாம் அனைவருக்கும் போதுமான அளவுக்கான மாமிசம் இதில் உள்ளது.வாருங்கள் வாருங்கள் அருமையான விருந்துஆனால் அந்தகாவலரோ, புரியாத மொழியில் ஏதோ சொல்லி மயங்கிய அந்த ஆட்டை தூக்கி காரில் போடுகிறார்.க்ஷிக்கோ எரிச்சல், என்னடா இந்தமனிதன், மிகவும் அடாவடிக்காரனாகவும் பேராசைக்காரனாகவும் இருக்கின்றானே? முழுவதையும் அவனே எடுத்துக்கொண்டானே. சொல்லுகிறார், நீ மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவது என்று அறியாதவனாக இருக்கின்றாய். நீமட்டுமே முழுவது எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாயா? பரவா இல்லை, நீயே வைத்துக்கொள், நான் எனக்காக, வேறொன்றை வீழ்த்திக்கொள்கின்றேன். என்று சொல்லி, இன்னொரு ஆட்டை குறிபார்க்கிறார். எச்சரிக்கை விடுக்கும் காவலரின் சொல் புரியவில்லை அலட்சியம் செகிறார். காவலரோ, எச்சரிக்கை செய்யும் பொருட்டு, வாணை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார். சப்தத்தில் ஆடுகள் ஓடுகின்றன, பசியுடன் இருக்கும் க்ஷியும் ஓடுகிறார். உடனே க்ஷியின் காலைகுறிவைத்து துப்பாக்கியால் சுட்டு கீழே வீழ்த்துகிறார். பிறகு க்ஷியை காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்கிறார்.மருத்துவத்துக்கு பின் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுகிறார், மொழிபெயர்ப்புக்கு, ஸ்டேனின் நன்பர்தான் வருகிறார். க்ஷியிடம் விசாரிக்கையில், ஆமாம் ஒரு விலங்இனை வீழ்த்தினேன், ஆனால் அந்த மனிதன் அதை எடுத்துக்கொண்டான், அதை என்னிடம் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. குற்றத்தை ஒப்புக்கொண்டதினால், மூன்றுமாத சிறைத்தண்டனை கொடுத்து தீர்ப்பளிக்கின்றார்கள்.குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் 3 மாத சிறைத்தண்டனை.ஸ்டேனின் நன்பர் அதை ஸ்டேனிடம் சொல்லி வருத்தப்படுகிறார். மூன்றுமாதம் அந்த புதர்மனிதனை சிறையிலடைத்தால் கண்டிப்பாக அவன் இறப்பது உறுதி. சுவற்றையே பார்த்திறாத அவனைச்சுற்றிலும் சுவர்மட்டுமே. மறுநாள் சிறைக்கு சென்று க்ஷியை விடுவிக்க கோருவது என்று முடிவு செய்கிறார்கள். நிறையில் நமது நாயகனோ, சாப்பிடாமல், ஜன்னலையே வெறித்தவன்னம் இருக்கின்றார்.சிறையில் நாயகன்ஒருவாரமாக சாப்பிடாமல் இருக்கும் காரனத்தை வினவுகிறார்கள், மனிப்புகேட்டுக்கொண்டு, நாளை முயற்சிப்பதாக உறுதியளிக்கின்றார்.ஸ்டேனும் அவர் நன்பரும் சிறைஅதிகாரியிடம் க்ஷியை விடுவிக்கும்படி கோருகிறார்கள். சட்டப்படி முடியாது என்று மறுத்துவிடுகிறார். ஒருவேளை யாரேனும், இவன் சார்பில் உறுதி கொடுத்து இவனை வேலை கொடுத்தால் சட்டப்படி, விடுவிக்கலாம், ஆனால், இவனுக்கோ அனுபவமும் இல்லை தகுதியும் இல்லை.ஸ்டேன் நன்பர் சொல்லுகிறார், "இவனுக்கு தகுதி இருக்கிறது, செடிகளைப்பற்றியும் விலங்குகளைப்பறியும் எங்களுக்கு வழி நடத்துவான். ஸ்டேனும் உறுதியளிக்கிறார், இவனை நான் சுற்றுச்சூழல் நிபுனராக வேலைக்கு என்னிடம் அமர்த்துகிறேன்.பிறகு க்ஷியை அழைத்துக்கொண்டு செல்கிறார்கள், க்ஷி கடவுள்கொடுத்த அந்த்த பரிசையும் எடுத்துக்கொண்டு அவர்களுடன் செல்கிறார், அதுகுறித்து ஸ்டேனின் நன்பரிடம் விளக்கம்சொல்லும்போது, அவர்களால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.சுற்றுசூழல் நிபுனர் சிறையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்ஸ்டேனிடம், விலங்குகளைப்பற்றிய நிபுனத்துவம் மிகுந்த புதர்-மனிதன் வேலைசெய்வதை கேள்விப்பட்டு, சிறுத்தை தாக்குதலில் காயம்பட்ட தனது நன்பரை, தேடித்தரும்படி, நன்பர் ஒருவர் வருகிறார். மூவரும் காயம்பட்டவரை தேடிச்செல்கின்றனர். சிறுத்தை தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து கால்தடத்தை தொடர்ந்து க்ஷி செல்கிறார். புதர் நிறைந்த ஒரு இடத்துக்கு போகும்போது, அதிலிருந்து ஒரு சிங்கம் வெளிவந்து மூவரையும் துரத்துகின்றது. மூவரும் அலறியபடி உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறார்கள். நல்லகாலம் அவர்கள் வந்த வேன் இருக்கிறது, அதன் அடியில் சென்று படுத்துக்கொண்டால், தப்பித்துவிடலாம். க்ஷியும், மொழி-பெயர்ப்பளரும் வேனுக்கு அடியில் சென்று படுத்துவிடுகின்றனர். நிம்மதி, அப்பாடா என்று பெருமூச்சுவிடுகிறார்கள். ஆனால் அழைத்துவந்த நன்பரோ, சிங்கத்திடம் இருந்து தப்பிக்க, வேனை எடுத்து சென்றுவிடுகிறார். கீழே படுத்திருந்தவர்களுக்கு, மீண்டும் ஆபத்து, மீண்டும் உயிரை காத்துக்கொள்ள ஓடுகிறார்கள்.ஐய்ய்ய்யோ வேனை எந்த மடையன் எடுத்தது??????ஒரு ஒல்லியான மரத்தைப்பார்த்த மொழிபெயர்ப்பளர், ஆஹா தப்பிக்க நல்ல இடம் கிடைத்த மகிழ்சியில், அந்த மரத்தில் ஏற ஆரம்பிக்கின்றார். க்ஷி வேறொரு மரத்தில் ஏறுகிறார். மொழிபெயர்ப்பளருக்கு மேலும் ஒரு சோதனை வருகிறது. ஒல்லியான அந்த மரத்தில் ஏறும்பொழுது, நடுப்பகுதி வரை பிரச்சினை இல்லாமலிருந்தது, மரத்தின் உச்சிக்கு செல்ல செல்ல பாரம் தாங்காமல், கீழே வளைய ஆரம்பிக்கின்றது. உச்சிக்கு சென்றவுடன், வளைந்து தரைக்கு வந்துவிடுகிறது, இதுக்கு மரத்தில் ஏறாமலே இருந்துவிடலாம். பிறகு க்ஷி வந்து கத்தி, பயமுறுத்தி, சிங்கத்தை விரட்டிவிடுகிறார்.நல்ல மரம், இப்படியா கீழே கொண்டுவந்துவிடும்????க்ஷி, மொழிபெயர்ப்பளர் மற்றும், ஸ்டேன் மூவரும், ஒன்றாக வேலைபார்த்து, சாப்பிட்டு, தூங்கி பொழுதைக்கழிக்கின்றனர். க்ஷி கார் ஓட்டவும் கற்றுக்கொள்கிறார்.அடுத்து படத்தின், கடைசிக்காட்சி.துரத்தும் காவலர்களிடம் இருந்து தீவிரவாதிகள் தாங்கள், தப்பிக்க, கேத் பணிபுரியும் பள்ளிக்குள் நுழைந்த்து, கேத் மற்றும் அவர் வகுப்பு குழந்தைகள் (சுமார் 30 பேர்) அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்திவிடுன்றனர். காவலர்களிடம், கேத்தையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டி, அவர்களை விலகிப்போகும்படி சொல்கின்றனர்.பள்ளிக்குள் தீவிரவாதிகள்அருகில் இருக்கும் பக்கத்து நாட்டுக்கு இந்தநாட்டு எல்லையை கடந்து சென்றுவிட்டால், தப்பிவிடுவர். தப்பிப்போகும் இடத்தை சொல்லி, அதுவரைக்கும் ஒவ்வொரு 20 மைல் தூரத்திலும், அவர்களுக்கு தேவையான சாப்பாடு செய்து வைக்கவேண்டும்,. யாரும் பின் தொடரக்கூடாது,மீறினால் குழந்தைகளும், ஆசிரியரும் கொல்லப்படுவர் என்று மிரட்டுகின்றனர்.மீறினால் குழந்தைகளும், ஆசிரியரும் கொல்லப்படுவர்குழந்தைகளுடன் ஊர்வலம் ஆரம்பிக்கின்றது.அடாத கடத்தலிலும் விடாத ரம்மி.க்ஷி, ஸ்டேன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் மூவரும், ஒருவகையான கட்டு மான்களை எண்ணிக்கை கணெக்கெடுப்பதற்காக, அருகில் உள்ள மலைக்குசென்று, தொலைநோக்கிமூலம் பார்த்து மான்களை கணக்கெடுக்க ஆரம்பிக்கின்றனர்.க்ஷி சொல்லுகிறார், அங்கு கீழே தூரத்தில் யாரோ வருகின்றனர். ஸ்டேனும் நொலைநோக்கிவழியே பார்க்கையில், ஒரு ரானுவ வாகனத்தில் இருந்துஎதையோ கீழே இறக்கி வைப்பது தெரிகிறது. உணவுப்பொருள் மாதிரியும் தெரிகிறது, எதோ உல்லாசப்பயனம் வந்திருப்பதுபோல தெரிகிறது,ஆனால், அதையெல்லாம் இறக்கிவிட்டு போய்விடுகின்றனர். இவர்களுக்கு குழப்பமாகிவிடுகிறது. என்னடா அத்துவாணக்காட்டில் இறக்கிவைத்து போய்விட்டனர்?இதற்கிடையில், துப்பாக்கிமுனையில், கடத்திவரப்பட்ட சிறுவர்களால் நடக்க முடியவில்லை, தலைவன், ஒரு சிறுவனை அழைத்து, அருகில் இருக்கும் குன்றுக்குபோய், அதன் மறுபக்கம் கீழே இருக்கும் ரானுவ வீரர்களுக்கு ஏதோ செய்தி சொல்லி அனுப்புகிறான், சிறுவனு, அந்த குன்று நோக்கி பயனிக்கின்றான், அங்குதான் நம்மவர்கள் இருக்கின்றனர்.அவர்களும் தொலைநோக்கிவழியாக, குழந்தைகள் மற்றும் பலர் துப்பாக்கியுடன் இருப்பதைப் பார்த்து நிலமையை ஊகித்து ஏதோ விபரீதம் என்று புரிந்துகொள்கின்றனர். வானொலியில் கேட்ட செய்தியை நினைவுக்கு கொண்டுவந்து, அது சம்போகா திவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்று ஊகிக்கின்றனர்.[என்ன இது துப்பாகி மனிதகளுடன் குழந்தைகள்????ஏதோ விபரீதம்ஸ்டேன் ஒரு திட்டமிடுகிறார். க்ஷியை அந்த சிறுவன் ஆடையை அனிந்து அங்கு போய், விலங்குகளுக்கு பயன்படுத்தும் ஒருவகை மயக்கமருந்த்தைஊசிமூலம் அந்த்த தீவிரவாதிகளுக்கு ஏற்றிவிடவேண்டும். இந்த திட்டத்தினை ஒரு கடிதம் மூலமாக கேத்துக்கு தெரிவித்து, அவர்கள் விழுந்தவுடன், துப்பாகிகளை அப்புறப்படுத்திவிடவேண்டும். க்ஷியிடம் திட்டம் விளக்கப்படுகிறது, அவரும் தயாராகிறார்.அங்கிருக்கும் இவர்கள் எப்படி இந்த டப்பாவுக்குள் வந்தனர்கீழே சாப்பாட்டு பந்தி முடிந்தபிறகு, தலைவர் 1 மணிநேரம் ஓய்வு அறிவித்து தூங்கச்செல்கிறார். இதுதான் சமயம் என்று சீட்டாட்ட பிரியர்கள்இருவரும், சீட்டு விளையாட மறைவான இடத்துக்குப்போகின்றனர்.ஊசியை இப்படி அடிக்கவேண்டும்க்ஷி தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை உணர்கிறார், புறப்படுகிறார். சரியாக செயலாற்றுகிறார்.புறப்பட்டுவிட்டார் வெற்றித்திருமகன்குழந்தைகள் அவரை வித்தியாசமாக பார்ப்பதும், ஊசியால் அவர்களை அடிக்கும்போது திடுக்கிடுதலைபார்த்து குழந்தைகள் சிரிப்பதும், க்ஷிசிரிக்காதீர்கள் என்று முகபாவனை காடுதலும், கடிதத்தை கேத் குழப்பத்துடன் வாங்கிக்கொள்ளுதலும் நன்றாக காட்சியமைக்கப்பட்டு இருக்கும். யார் அனுப்பிய கடிதமிது என்று கேத்துக்கு புரியவில்லை.என்ன இது காதல் கடிதமா?வெற்றிகரமாக அனைவரும் தூங்கிவிடுவர், சீட்டடச்சென்ற இருவரைத்தவிர. கேத் மற்றும் குழந்தைகள், அனைவரும் தீவிரவாதிகளின் துப்பாகிகளை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்று ஒளிந்துகொள்கிறார்கள்.துப்பாக்கியை போட்டுவிட்டு தூக்கம்ஸ்டேனும் மொழிபெயர்ப்பளரும் அந்த இருவருடனும் சண்டையிட்டு அவர்களை வீழ்த்துகின்றனர். அப்பொழுது ஜீப்பை எடுத்துவரச்சென்ற க்ஷி, கியர் எப்படிப்பொடுவது என்று குழம்பி, ரிவர்ஸ் கியரைபோட்டுவிட, வண்டி பின்நோக்கிச்செல்கிறது. சமயோசிதமாக அவரும் பின்னால் இருந்த்து ஓட்டிவருகிறார். இதைப்பார்த்த ஸ்டேன் அவருக்கு உதவ செல்கிறார், அப்பொழுது ஸ்டேனின் நன்பர் காவலருடன் அங்கே வருகிறார். ஸ்டேன் அவரிடம் துப்பாக்கிகளைகொடுத்துவிட்டு, க்ஷிக்கு உதவச்செல்கிறார்.அடடா இந்த குதிரையை அடக்குவது சிரமமாக இருக்கேநடந்த விவரங்கள் எதுவுமே தெரியாமல், கேத்தும், குழந்தைகளும் வெளியே வருகின்றார்கள், அங்கு ஸ்டேனின் நன்பர் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நிற்பதைப்பார்த்து, அவர்தான் உதவிசெய்தவர் என்று நினைத்து, நன்றி சொல்லி அவருடன் சென்றுவிடுவார். ஸ்டேனுக்கு கடுப்பு ஏறுகிறது, கேத்மீதான காதலும் ஏறுகிறது.தண்டனைக்காலம் முடிந்த பிறகு, க்ஷி, தன் பயணத்தை தொடர விரும்புவதாக சொல்லுகிறார். ஸ்டேன் க்ஷிக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறார், ஆனால் க்ஷிக்கு உதவுவதுபோல எந்த பொருளும் இல்லை, சிறிது பணம் கொடுக்கின்றார். அதை வாங்கிக்கொண்டு க்ஷி விடைபெற்று பயனத்தை தொடர்கிறார்.இருவரும் கஷ்டத்துடன், க்ஷிக்கு விடைகொடுக்கிறார்கள்.சென்றுவா நன்பனே, உன் பிரிவுத்துயரை நாங்கள் எப்பாடி தாங்கப்போகிறோமோ தெரியலைஸ்டேன் கேத்திடம் தன் காதலை சொல்லும் காட்சி மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். சார்ளி ச்ச்ப்ளின் பாணியில் அங்கிருக்கும் பொருட்களையெல்லாம் தெரியாமல் பதட்டத்தில் மோதி கீழே தள்ளிவிடுவார், கேத்தும் அடக்கமாட்டாமல் சிரித்தவாறே காதலை ஏற்றுக்கொள்ளுவார்.பிறகு ஒருநாள் க்ஷி பூமியின் முடிவை கண்டுபிடிக்கிறார். சந்தோஷத்துடன், தீமைநிறைந்த அந்தப்பொருளை தூக்கி பூமிக்கு வெளியே எறிந்துவிட்டு. குடும்பம் இருக்கும் இடத்துக்கு திரும்பி வருகிறார், அனைவரும் குதுகலமாக மகிழ்ச்சியுடன் வரவேற்று மகிழ்கின்றனர்.அடடா இதுதான் பூமியின் முடிவுப்பகுதியா?பூமிக்கு சொந்தமில்லாத இந்தப்பொருள் பூமியைவிட்டு போகக்கடவதுகுடும்பத்துடன் குதுகலம்